சாரதியின் தூக்கக் கலக்கம் – பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

 


சாரதியின் தூக்கக் கலக்கம் காரணமாக முச்சக்கர வண்டி ஒன்று வீதியிலிருந்து விலகி கொன்கிரீட் தூணில் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் கஹடகஸ்திகிலிய (Kahatagasdigiliya) காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுகெலியாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் தூக்கக் கலக்கம்

இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி, ஒரு பெண் மற்றும் பின்புற இருக்கையில் பயணித்த இரண்டு ஆண்கள் அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.

உபுல்தெனிய பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.