முதியோர் உதவித்தொகை பெறுவோர் குறித்து அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ (L. G. Wasantha Piyatissa) தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், உதவி தொகை பெறுபவர்களின் எண்ணிக்கைணை ஒரு மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த விடயம் குறித்த கலந்துரையாடல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த கொடுப்பனவு பெற வேண்டியவர்களில் 2000 பேர் அளவில் இறந்து விட்டதாக அவர் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
srilanka
