நாட்டில் விற்பனை செய்யப்படும் அழகுசாதன பொருட்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

49 வகையான அழகுசாதன பொருட்கள் பயன்படுத்த பொருத்தமற்ற அளவில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் அவற்றில் முக்கியமானவை என அதிகாரசபையின் போட்டித்திறன் மேம்பாட்டு பணிப்பாளர் சமந்த கருணாரத்ன தெரிவித்தார்.

பொருத்தமற்ற அழகுசாதன பொருட்கள் ஒன்லைனில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.