சிக்குன்குனியா வைரஸ் பரவல் - உலக சுகாதார நிறுவனம் அச்சம்
உலக சுகாதார நிறுவனம் (WHO) சிக்குன்குனியா எனும் நுளம்பு மூலம் பரவும் வைரஸ் பற்றிய அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு முன் உலகமெங்கும் பரவிய இதே வைரஸ், தற்போது மீண்டும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலிருந்து ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய கண்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அதிகாரியாக இருக்கும் டயானா ரோஹாஸ் ஆல்வரஸ் கூறுகையில்,
உலகம் முழுவதும் 119 நாடுகளில் வசிக்கும் சுமார் 5.6 பில்லியன் பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கின்றனர்.
"2004-2005 ஆம் ஆண்டுகளில் உலகம் தாண்டிய பரவல் ஏற்பட்டது. அதே நிலை மீண்டும் ஏற்படுகிறது," என அவர் தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் சிறிய தீவுகள் முதலில் பாதிக்கப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவியது.
2025 இன் தொடக்கத்தில் இந்த புதிய பரவல் இந்தியப் பெருங்கடல் தீவுகளான ரீயூனியன், மயோட்டே மற்றும் மொரிஷியஸ் போன்ற இடங்களில் பெரும் அளவில் பரவத் தொடங்கியது.
ரீயூனியனில் மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதி ஏற்கனவே வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது மடகாஸ்கர், சோமாலியா, கென்யா, மற்றும் தெற்காசிய (இலங்கை உட்பட) போன்ற நாடுகளிலும் பரவல் தொடங்கியுள்ளது.
தென் பிரான்ஸ் பகுதிகளில், 12 இடங்களில் உள்ளூர் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டுக்கும் பயணம் செய்யாமல், உள்ளூர் நுளம்புகளால் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். இத்தாலியிலும் சமீபத்தில் ஒரு தொற்று வழக்கு கண்டறியப்பட்டுள்ளது.
சிக்குன்குனியாவிற்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இது பொதுவாக ஏடிஸ் வகை நுளம்புகளால் பரவுகிறது .
இதே நுளம்பு டெங்கு மற்றும் சீகா வைரஸையும் பரப்புகிறது.
இவை பகல் நேரத்தில் கடிக்கும் என்பதால் தடுப்புச்செயல்கள் மிக முக்கியமானவை.
விரிவான தடுப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இந்த வைரஸ் மீண்டும் உலகளாவிய அச்சத்தை ஏற்படுத்தும் என WHO எச்சரிக்கின்றது.
