இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் மீண்டும் தவிக்கும் காசா பெருமளவானோர் உயிரிழப்பு
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர வான்வழி தாக்குதல்களில் இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 400 இற்கும் அதிகமான் பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி முதல் போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், போர் நிறுத்தத்தை மீறும் வகையில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து காசாவில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலிய கோரிக்கைகளை ஹமாஸ் மறுத்ததை அடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா பகுதிகளில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
Tags:
world
